Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தியாக தீபத்தின் ஊர்தி மீது தாக்குதல் ; 06 பேருக்கும் பிணை


திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவப்படம் தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறு சந்தேகநபர்களும் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

 திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய சரீர பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. 

குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது. 

அந்நிலையில் மன்றில் மதியம், திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு,  முன்வைக்கப்பட்ட பிணைக்கான விண்ணப்பத்தின் அடிப்படையில் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபர் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. 

பொலிசாரின் சமர்ப்பணத்தின்போது, 

குறித்த நபர்களிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவதால் ஆர்ப்பாட்டம், இனக்கலவரம் ஏற்படலாம் எனவும் அத்துடன் சாட்சிகள் வெளி மாவட்டங்களில் இருப்பதனால் சூம் தொழில்நுட்பம் மூலம் சாட்சிகளை பெற்றுக் கொள்வதாகவும் இவர்களை பிணையில் விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணத்தின் பின்னர் குறித்த நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments