Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தனக்கு தானே தீ வைத்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை தீயுடன் கட்டியணைத்த போதை ஆசாமி


தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்ததில் இருவரும் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது, 

போதையில் குறித்த நபர் தனது குழந்தையை தாக்கியுள்ளார். அதனை தடுக்க  பொலிஸ் உத்தியோகத்தர் முற்பட்ட வேளை , குறித்த நபர் தனது உடம்பில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். 

அதை தடுக்க பொலிஸ் உத்தியோகஸ்தர் முற்பட்ட வேளையில் அந்நபர் தீயுடன் பொலிஸாரை கட்டிப்பிடித்துள்ளார்.

அதனால் இருவரும், தீக்காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில், தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட நபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments