Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.நகர் பகுதியில் காஸ் சிலிண்டர்களை திருடி வந்த இருவர் கைது


யாழ்ப்பாணத்தில் காஸ் சிலிண்டர்களை திருடி வந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து 10 காஸ் சிலிண்டர்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

யாழ்.நகர் பகுதி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகள் , உணவகங்களில் காஸ் சிலிண்டர்கள் திருட்டு போகும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் , அது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குருநகர் பகுதியை சேர்ந்த இருவரை கைது விசாரணைகளை முன்னெடுத்ததன் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 10 சிலிண்டர்களையும் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள இரு நபர்களும் ,போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் , போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காகவே சிலிண்டர்களை திருடி விற்று வந்துள்ளனர் என விசாரணைகளில் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments