படுக்கை அறையில் விஷப்பாம்பை விட்டு மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் காபி சூர்யா நகர் பகுதியில் உள்ள ஆதிகான் கிராமத்தில், கணேஷ் பத்ரா (வயது 25) , அவருடைய மனைவி பசந்தி பத்ரா (வயது 23) மற்றும் அவர்களுடைய மகள் டெபாஸ்மிதா (வயது 2) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
அந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.அதனை அடுத்து கணேஷ் பத்ரா ஒரு பாம்பாட்டியை சந்தித்து, பூஜை செய்வதற்காக பாம்பு வேண்டும் என்று கூறி, கடுமையான விஷம் கொண்ட நாகப்பாம்பை வீட்டுக்கு வாங்கி வந்துள்ளார்.
பிளாஸ்டிக் ஜாடி ஒன்றில் நாகப்பாம்பை கொண்டு வந்து மனைவியும், மகளும் படுத்திருந்த அறைக்குள் விட்டுள்ளார். இவர் மற்றொரு அறையில் தூங்கியுள்ளார். மறுநாள் காலை மனைவி, மகள் இருவரும் பாம்பு கடித்து இறந்து கிடந்தனர்.
சம்பவம் பற்றி அறிந்து வந்த போலீசார் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கை பதிவு செய்தனர். ஆனால் இருவரின் மரணத்தில் கணேஷ் பத்ராவுக்கு தொடர்பு இருப்பதாக அவர் மாமனார் கஞ்சம் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் விசாரணையை முன்னெடுத்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு கணவனை கைது செய்தனர்.
No comments