Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.பொன்னாலையில் பெருந்தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது


யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது , அவரிடம் இருந்து ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டு உள்ளதாகவும் , அவற்றின் பெறுமதி பல இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட நபரும் , மீட்கப்பட்ட கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். 

No comments