முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவிற்கு வவுனியா மேல்நீதிமன்றம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பிணை வழங்கியுள்ளது.
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கின் சாட்சி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக வவுனியா மேல்நீதிமன்றம் ஸ்ரீரங்காவை கைது செய்ய உத்தரவிட்டது.
இதனையடுத்து கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ரங்கா குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, கடந்த 8 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது வழக்கு வவுனியா மேல்நீதிமன்றில் நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மேல்நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கினார்.
No comments