Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

காதலை ஏற்க மறுத்த பெண் மீது கத்திக்குத்து


தான் காதலை தெரிவித்தபோது அதை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி காயப்படுத்திய  இளைஞன் நாராஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் கொழும்பு நாராஹேன்பிட்டி நில அளவை திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் காலி பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயது யுவதி ஆவார்.

குறித்த  யுவதி காலியிலிருந்து கொழும்பு நாரஹேன்பிட்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணித்த போது சந்தேக நபரும் அதே  பேருந்தில் பயணித்துள்ளார்.

குறித்த பஸ் யுவதியின்  வேலையிடத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டவுடன், இறங்குவதற்கு தயாரான யுவதியை சந்தேக நபர் தன்னிடம் இருந்த கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார்.

காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments