Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ரணதுங்கவின் கிரிக்கெட் குழுவிற்கு இடைக்கால தடை

விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சரின் முடிவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து நேரிய அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து பேசப்பட்டுள்ளது.

இதன் போது, இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆராய 4 பேர் கொண்ட அமைச்சரவைக்கு உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

No comments