Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, June 17

Pages

Breaking News

யாழ்.உரும்பிராய் காளி கோவிலில் அம்மன் சிலை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருட்டு


யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள காளி கோவில் ஒன்றில் இருந்து பெறுமதியான அம்மன் சிலை உள்ளிட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளன. 

வழமை போன்று இன்றைய தினம் புதன்கிழமை , பூசகர் ஆலயத்தை திறந்து பூஜை வழிபாடுகளை செய்ய முயன்ற போதே , நேற்றைய தினம் இரவு ஆலயத்தினுள் திருடர்கள் புகுந்து திருட்டில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது. 

அதனை அடுத்து பூசகர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டில் , சுமார் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான நாலடி உயரமான ஐம்பொன்னிலான அம்மன் சிலை , அம்மன் தாலி மற்றும் அம்மனின் தேடு உள்ளிட்ட ஒன்றரை பவுண் நகை, உண்டியலில் இருந்த ஒரு தொகை பணம் என்பவற்றையே திருடி சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர். 

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்

பலாலி வீதி இரவு 07 மணி வரை திறந்திருக்கும்

மண்டைதீவு புதைகுழி வதந்தியாம்

மாகாண மட்டப் போட்டிக்குச் செல்லும் வீரர்களை வாழ்த்தி வழியனுப...

மனைவியை சுட்டுக் கொன்ற பின் தனது உயிரை மாய்த்த கணவன்

வடக்கில் மனித புதைகுழிகள் - டக்ளஸிடம் விசாரணை செய்யுங்கள்

வடக்கு உத்தியோகஸ்தர்களுக்கு விரைவில் Ai பயிற்சி

அரச உத்தியோகஸ்தர்கள் சகல விடயங்களிலும் வெளிப்படைத்தன்மையாக இ...

வடக்கு முதலீட்டு வலயங்கள் தொடர்பில் வூசூ அமைப்புக்கு தெரியப்...

பருத்தித்துறை பிரதேச சபை தமிழரசிடம்