மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோன் 1998 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து, 2006 இல் பொலிஸ் பரிசோதகராகவும், 2011 இல் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகராகவும், 2015 இல் பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றார். 2020இல் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.
அந்நிலையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றி வந்தார்.
No comments