Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கூலிப்படையாக சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாது


வெளிநாடுகளில் கூலிப்படையாக செயல்படும் முன்னாள் இராணுவ வீரர்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைச்சிற்கோ அல்லது நாட்டின் இராணுவத்திற்கோ எந்த அதிகாரமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டால் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்க முடியும், இல்லையெனில், அத்தகைய நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலின் போது உக்ரேனிய வெளிநாட்டு படையணிக்காக போரிட்ட மூன்று இலங்கை முன்னாள் இராணுவ வீரர்கள் ரஉயிரிழந்ததாக கூறப்படும் செய்திகளின் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்புகளில் சேருவதற்கு சட்டவிரோதமான வழிகளை பயன்படுத்துவதால், அத்தகைய நபர்களை அடையாளம் காண்பது சற்று கடினமாக உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் உக்ரேனுக்குள் சண்டையிடுவதற்காக நாட்டை விட்டு வெளியேறிய எந்தவொரு நாட்டவர் மீதும் அரசாங்கம் எந்தக் கட்டுப்பாட்டையும் செலுத்த முடியாது என்றும் ஒரு நாடு என்றவகையில் உள்ளூர் முகவர்கள் மூலம் ஆட்சேர்ப்புகளைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

No comments