Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். இந்து மயானம் ஒன்றின் எரிமேடை இரும்பு தூண்கள் திருட்டு


யாழ்ப்பாணத்தில் இந்து மயானம் ஒன்றின் எரிமேடையில் இருந்த இரும்பு தூண்களை இரும்பு திருடர்கள் அபகரித்து சென்றமையால் , சடலங்களை எரியூட்டுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்தில் எரிமேடையில் சடலங்களை எரியூட்டுவதற்கு விறகுகளை அடுக்குவதற்காக இரும்பு தூண்கள் நான்கு நடப்பட்டு இருந்தன. அவற்றினை இரும்பு திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். 

அதனால் , சடலங்களை எரியூட்டுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் திருடியுள்ளனர். 

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். 

No comments