Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் கடலாமையுடன் இருவர் கைது


யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடலாமை இறைச்சி மீட்கப்பட்ட நிலையில் உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 21 கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது.

குருநகர் பகுதியில் பிடிக்கப்பட்ட கடலாமைகள் இரண்டினை நாவற்குழிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கிய போதே சாவகச்சேரிப் பொலிஸார் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments