Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.மீசாலையில் கடையில் தீ ; ஒரு மணிநேரம் தடைப்பட்ட மின்சாரம்


யாழ்ப்பாணத்தில் தீ விபத்தினால் கடை ஒன்றில் இருந்த பெறுதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. 

குறித்த தீ விபத்தினால் அப்பகுதிக்கான மின் விநியோகமும் சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டு இருந்தது. 

மீசாலை , இராமவில் பகுதியில் உள்ள கடை கட்டடம் ஒன்றில் மின் ஒழுக்கு காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

அதனால் கடையில் இருந்த பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. 

தீ விபத்தினை அடுத்து , தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயனை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments