பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் பொலிசாரின் மீது குற்றச்சாட்டு முன் வைத்துள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுப்பட்டு வருகிறது.
அனுராதபுரத்தை சேர்ந்த ஷானுக எனும் 22 வயதுடைய இளைஞனும் அவரது நண்பர்கள் மூவரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அநுராதபுர பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களையும் அநுராதபுர பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை இளைஞன் ஒருவர் திடீர் சுகவீமடைந்ததாக தெரிவித்து அநுராதபுர வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் உயிரிழப்புக்கு பொலிஸார் தான் காரணம் என இளைஞனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments