Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன் திடீரென உயிரிழப்பு


யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி , விடுவிக்கப்பட்டு இருந்தார். 

இந்நிலையில் திடீரென இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் , இளைஞனின் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுகிறது. 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வைத்திய சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

No comments