கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்றைய தினம் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மருதநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயராம் டினேஸ் (வயது 33) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments