Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இளவரசியின் யாழ். வருகையால் பொது நூலகத்திற்கு பூட்டு


பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் இன்றைய தினம் வியாக்கிழமை யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது. 

யாழ்.பொது நூலக பிரதான வாயிலில் " விசேட காரணத்தினால் காலை 10. 30 மணிக்கு பூட்டப்பட்டு , பிற்பகல் 2 மணிக்கு மீள திறக்கப்படும்" என அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. 

இளவரசி உள்ளிட்ட குழுவினர் யாழ்.பொது நூலகத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டமையால் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக நூலகம் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்ட போதிலும் , அறிவித்தலில் " விசேட காரணம்" என குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments