யாழ்.ஊடக அமையத்தால் மலையக பாடகி அசானி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கெளரவிக்கபட்டார்.
யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டிருந்த அசானி தனக்கு உதவிய நல்லுலங்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக யாழ்.ஊடக அமையத்துக்கு குடும்பத்தினர் சகிதம் வருகை தந்தார்.
இதன் போது யாழ்ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் அசானிக்கு பொன்னாடை போர்த்தி அவரை கெளரவித்தார்.
இதன் போது சரிகம போட்டி நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க காரணமாக இருந்தவர்களுக்கு அசானி நன்றி தெரிவித்ததுடன் தனக்கு ஆதரவு வழங்கி தன்னை கௌரவிக்கும் அனைவருக்கும் அசானி நன்றி தெரிவித்தார்.
No comments