Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மேல்மருவத்தூர் சக்தி பீடத்தினால் பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு


தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு இராவணன் ஆண்ட இலங்காபுரி மண்ணில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தினால் பொங்கல் பொதிகள், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

 யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில், இலங்கை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையம் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடப்பபெற்றது. 

இதன்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

 நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் சிரேஷ்ட உறுப்பினர் திரு.சோ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலய அறங்காவற்குழு தலைவர் C.V.K.சிவஞானம், லண்டன் ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் ஆலய இணைஸ்தாபகர் கலாநிதி.அப்பையா தேவசகாயம், சக்தி பீடம் சக்தி வல்லிபுரம் ரவி, யாழ் லயன்ஸ்கழக முன்னாள் தலைவர் லயன் குமாரசாமி ஜெயந்தன், நல்லூர் வடக்கு சனசமூகநிலைய தலைவர் பூ.லிங்கநாதன், விநாயகர் விளையாட்டுக்கழக தலைவர் த.பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டு பொங்கல் பொதிகளை வழங்கிவைத்தனர்.







No comments