கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கல்மடு பகுதியை தயாளன் தனுசன் (வயது 20) மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த கிருஸ்ணன் சதீசன் (வயது 18) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நீர்பாசன வாய்க்காலிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
மேலதிக விசரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments