யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும் என்பது நிறைய நாள் ஆசை. தற்போது யாழ்ப்பாணம் வந்துள்ளேன் மகிழ்ச்சியாக உள்ளது என இந்தியாவின் பிரபல பாடகரும் , புல்லாங்குழல் இசை கலைஞருமான பாலக்காடு ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
தமிழ் சினிமாவில் பல பிரபலமான பாடல்களை பாடியுள்ளேன். யாழ்ப்பாணத்தில் எனக்கு இசைத்துறை சார்ந்த நண்பர்கள் உண்டு அவர்களுடன் கச்சேரிகளில் பாடியுள்ளேன்.
எனக்கும் யாழ்ப்பாணம் வர வேண்டும் என நீண்ட நாள் ஆசை, தற்போது அது நிறைவேறியுள்ளது. யாழ்ப்பாண உணவு பழக்க வழக்கங்கள் , மக்கள் எல்லாம் பிடித்திருக்கிறது. என தெரிவித்தார்
No comments