கசிப்புடன் கைதான பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து ஆயிரத்து 500 மில்லி லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளுக்கு பின்னர் பொலிஸார் நேற்றைய தினம் புதன்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, மன்றில் பெண் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , கடுமையாக எச்சரித்த மன்று , 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
No comments