Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். இளைஞனை தாக்கி மோட்டார் சைக்கிள் கொள்ளை


வீதியில் பயணித்த இளைஞனை தாக்கி , அவரது மோட்டார் சைக்கிளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. 

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி , யாழ் - கண்டி நெடுஞ்சாலையில் "வேகோ" ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை அரியாலை பகுதியில் வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியுள்ளது. 

தாக்குதலில் இருந்து தப்ப , மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு, இளைஞன் ஓடியுள்ளார். 

அதன் போது , தாக்குதலாளிகள் இளைஞனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments