Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அச்சுவேலியில் வெளிநாட்டு வாசியிடம் திருட்டு - ஒரு மணி நேரத்தில் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்


வெளிநாட்டில் இருந்து வந்து , யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்த நபரின் உடமைகளை களவாடிய திருட்டு சந்தேக நபரை பொலிஸார் ஒரு மணி நேரத்தில் கைது செய்து , திருட்டு போன பொருட்களையும் மீட்டுள்ளனர் 

நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வந்தவர் விடுமுறையை களிக்கும் நோக்குடன் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வீடொன்றில் தங்கி இருந்துள்ளார். 

குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உள்நுழைந்த திருடன் , வீட்டில் இருந்த வெளிநாட்டு வாசியின் மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை களவாடி சென்றான். 

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரிடம் முறையிட்டதை அடுத்து , துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments