Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஜம்போறி மாநாட்டிற்கு யாழில் இருந்து 253 மாணவர்கள் செல்கின்றனர்


இலங்கை சாரணர் சங்கத்தின் 10வது ஜம்போறி மாநாட்டிற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 11 பாடசாலைகளைச் சேர்ந்த 253 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இலங்கை சாரணர் சங்கத்தின்  10ஆவது ஜம்போறி மாநாடு திருகோணமலையில் நாளைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இம்மாநாட்டில் யாழ். மாவட்டத்திலிருந்து 11 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 253 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதனை முன்னிட்டு சாரணர்களை கெளரவித்து அனுப்பிவைக்கும் நிகழ்வு  வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நேற்றைய தினம்யாழ் பழைய பூங்காவில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வின் போது யாழ். மாவட்ட சாரணர் கொடிக்கான சாரணர் அணிவகுப்பு இடம்பெற்றதுடன், சாரணர்களுக்கான சீருடைகள் மற்றும் ஜம்போறியில் பங்குபற்றும் சாரணர்களுக்கு தேவையான உணவுப்பொருள் என்பன ஆளுநரால் வழங்கிவைக்கப்ட்டன.





No comments