ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.
எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும் இது ஏற்படவில்லை.
தாமதத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாகவும் அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாத வகையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments