Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, May 15

Pages

Breaking News

யாழில். போராட்டத்திற்கு தடை கோரிய பொலிஸாரின் மனு நிராகரிப்பு


76வது சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதிய பொலிஸார் யாழ்ப்பாண நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவை பெற முயற்சித்த போதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரினால், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலருக்கு போராட்டம் நடத்த தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாண பதில் நீதவான் பா.தவபாலன் நேற்றைய தினம் சனிக்கிழமை நிராகரித்தார்.

பதில் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற பொலிஸார் தடை மனுவை சமர்பித்தபோதும்,போராட்டம் நடத்துவதற்கு பொதுமக்களுக்கு உரித்துண்டு. சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் போராட்டங்களை நடத்த முடியும் என தெரிவித்த பதில் நீதவான் , தடையுத்தரவு கோரிய மனுவை நிராகரித்தார்.