Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Wednesday, May 28

Pages

Breaking News

கச்ச தீவு திருவிழாவிற்காக ஏற்பாடுகள் மும்முரம் - விகாரைக்கும் வர்ண பூச்சு பணிகள்


கச்ச தீவு திருவிழாவிற்காக ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் முழுவீச்சில் முன்னெடுத்து வருகின்றனர். 

வருடாந்த கச்சத்தீவு பெருதிருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி மற்றும் 24ஆம் திகதிகளில் கச்சத்தீவு தீவில் நடைபெற உள்ளது.

பெருவிழாவின் பிரதான ஆராதனை யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெறவுள்ளது. 

அதனை முன்னிட்டு பக்தர்களுக்கான வசதிகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள், இறங்குதுறைகள் மற்றும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல் போன்ற வேலைகளை முன்னெடுத்துள்ளனர். 

மேலும், இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட விகாரையின் வண்ண சலவை மற்றும் பழுதுபார்ப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் வளாகத்திற்கு செல்லும் பாதைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கடற்படை மேற்கொண்டுள்ளது. 

திருவிழாவிற்கு செல்லும் இலங்கை பக்தர்களுக்காக படகு சேவைகள்  குறிகாட்டுவான் மற்றும்  நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து இடம்பெறும்.