யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை மரியாதை நிமித்தமாக நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், நடைபெற்ற குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், போதைப்பொருள் பாவனை, சட்டம் ஒழுங்கு என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் கலந்து கொண்டிருந்தார்.
No comments