கடந்த 2005 சமாதான காலத்தில் பொலநறுவை ஊடாக பயணித்த போது வெலிக்கந்தவில் வைத்து படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதி கௌசல்யன் உள்ளிட்ட போராளிகள் மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அ.சந்திரநேரு ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் வியாழக்கிழமை கொக்குவிலில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ப.தர்சானந், வலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான அ.ஜோன் ஜிப்பிறிக்கோ, திருமதி. சி. மரியறோசறி (செல்வி), லோ.ரமணன் மற்றும் வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான
திருமதி சந்திரவதனி காந்தராசா மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
No comments