Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொலிஸ் உத்தியோகஸ்தர் சுட்டுக்கொலை - இருவர் கைது


சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

லுனுகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது, சந்தேகநபர்  பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறித்து, பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டு விட்டு, சந்தேக நபர் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

தப்பியோடிய சந்தேக நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

அதேவேளை சந்தேகநபர் மறைந்து இருக்க உதவிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments