மினுவாங்கொடை - யாகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்களில் ஒருவரை, வீட்டில் இருந்தோரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
குறித்த வீட்டினுள் மூவர் அடங்கிய கொள்ளைக் குழுவொன்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொள்ளையிடும் நோக்கில் நுழைந்துள்ளனர்.
இதன்போது கொள்ளையர்களில் ஒருவரை வீட்டில் இருந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றைய இரு கொள்ளையர்களும் தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments