Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, May 20

Pages

Breaking News

யாழில். போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த உயிர் நண்பன்


போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு மீண்டும் போதைப்பொருள் கொடுத்த உயிர் நண்பனால் , இளைஞனின் உயிர் பிரிந்துள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர் ,அவற்றில் இருந்து மீண்டு , வேலைக்கு சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற வேளை போதை பொருளை இளைஞனுக்கு கொடுத்துள்ளனர். 

நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட நிலையில் , மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால் , அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது. 

அதனை அடுத்து , இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து , தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் , நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார். 

தயார் இளைஞன் கூறிய இடத்திற்கு சென்ற வேளை , மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , இளைஞன் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார் , இளைஞனை அழைத்து போதைப்பொருளை கொடுத்த , மற்றைய இளைஞனை கைது செய்து , மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தியதை அடுத்து  , வைத்திய அறிக்கையில் இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


தமிழ்க் கட்சிகள், காவாளித்தனமான அரசியலை முன்னெடுக்கின்றன

யாழில். துவிச்சக்கர வண்டிகளை திருடிய குற்றத்தில் ஒருவர் ஹெரோ...

நல்லூர் சூழலில் அமைந்துள்ள அசைவ உணவகம் அகற்ற கோரி போராட்டம்

2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம்

ஆளுநரின் பணிப்பை அடுத்து 769 வழித்தட தனியார் பேருந்து சாரதிக...

764 மற்றும் 769 ஆகிய வழித்தட பேருந்துகள் காங்கேசன்துறை புகைய...

வெற்றிப் பெற்ற 40 % வேட்பாளர்களின் பெயர்கள் இதுவரை கிடைக்கவி...

சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகி...

வவுனியாவில் கடைக்கு சென்றவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

வங்கிக் கணக்குகளைத் ஆரம்பிக்கவும் TIN இலக்கம் கட்டாயம்