Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்காததால் குடும்பஸ்தர் உயிர் மாய்ப்பு


போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கிடைக்காதமையால் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். 

போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரி மற்றும் தாயாரிடம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பணம் கேட்டு , வீட்டில் குழப்பத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு , வீட்டார் பணம் கொடுக்காததால் , தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 

குறித்த குடுப்பஸ்தருக்கு திருமணமாகி 05 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில் , அதீத போதைப்பொருள் பாவனையால் , குடும்ப வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்தமையால் , அவரது மனைவி பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்வதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 


No comments