Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மன்னாரில் 10 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை


மன்னாரில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்றைய தினம் இரவு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

தலைமன்னார் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகித்துள்ள பொலிஸார் , சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். 

குறித்த நபரும், அவரது மனைவியும் தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் சந்தேகநபர் போதைக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அருகில் இருக்கும் வயதான பெண்ணொருவர் சந்தேகநபருக்கு உணவு வழங்கி  வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் , சிறுமி காணாமல் போயுள்ளார். 

அருகில் இருந்த CCTV கமராக்களின் உதவியுடனும் ,ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments