Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடதாரகை திருத்த பணிக்கு 32 இலட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பீடு


யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் வடதாரகை படகினை திருத்தம் செய்வதற்கு 32 இலட்ச ரூபாய் செலவாகும் என கடற்படை தெரிவித்துள்ளது. 

கச்சத்தீவு திருவிழாவிற்கு முன்னர் வடதாரகை படகினை திருத்தம் செய்யமாறு , யாழ்.மாவட்ட செயலர் அறிவுறுத்தியமைக்கு இணங்க , திருத்த வேலைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமில் தரித்து நிற்கும் வடதாரகை படகின் திருத்த வேலைக்கான மதிப்பீட்டை கடற்படையினர் மேற்கொண்டனர். 

அதன் போது , திருத்த பணிகளுக்காக 32 இலட்ச ரூபாய்  செலவாகும் எனவும் திருத்த பணிகள் முன்னெடுக்கப்படும் வேளையில் மேலும் பழுதுகள் காணப்பட்டால் , அவற்றினை திருத்தம் செய்வதற்கு மேலதிக பணம் தேவைப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை குறிகாட்டுவான் நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் குமுதினி படகு இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் சேவையில் ஈடுபடும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

படகின் திருத்த வேலைக்காக 75 ஆயிரம் ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments