Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றைய தினம் புதன்கிழமை மற்றும் நாளைய தினம் வியாழக்கிழமை ஆகிய  இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெற்றுவருகின்ற  நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  ஊழியர் சங்கத்தினால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் அதேசமயம் நாளைய தினம் வியாழக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் குறித்த இரு தினங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தினை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments