Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தேரர் கொலை சந்தேகநபர் சுட்டுக்கொலை


கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை  பொலிஸார் அழைத்து சென்ற போது ,சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் ஒருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் மொனராகலை ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , ஆயுதங்களை மறைத்து வைத்துள்ள இடத்தை காண்பிக்கிறேன் என சந்தேக நபர் , அத்தனகல்ல யடவக்க  பகுதிக்கு பொலிசாரை அழைத்து சென்று , அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளையே பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். 

No comments