தெனியாய பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளுக்கு இல்ல அலங்கரிப்புக்காக மூங்கில் மரங்களை வெட்டச் சென்ற இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூங்கில் மரத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றியில் மரம் தொடுகையுற்றதால், அவர்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கிய இரண்டு மாணவர்களும் உடனடியாக தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு மாணவர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
No comments