Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் கைது


யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். 

தாவடி  பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை தகராறில் ஈடுபட்டவர்களை , வீட்டின் உரிமையாளர் , வீட்டின் முன் நின்று தகராறில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். 

அதனால் கோபமடைந்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டனர் 

அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தகராறில் ஈடுபட்ட 06 பேரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments