வவுனியா வெடுக்குநாறிமலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக முல்லைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டு இருந்த ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , கடந்த 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் விடுதலையான ஆலயத்தின் பூசாரியார் சுகவீனமடைந்தநிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி, சிறையில் இருந்த கால பகுதியில் 5 நாட்கள் தொடர்ச்சியாக பூசகர் சிறையில் உண்ணாவிரதம் இருந்திருந்தார்.
அதனால் அவரது உடல்நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலையே சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
No comments