Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கடற்படையினர் இருவர் கைது


யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் நபர் ஒருவருக்கு கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில்  கடற்படை புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவரையும் , அவர்களிடம் கஞ்சாவை வாங்கிய குற்ற சாட்டில் பொது மகன் ஒருவரையும் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கஞ்சா போதை பொருள் வியாபாரம் நடைபெறுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வியாபர நடவடிக்ககையில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 04 கிலோ 400 கிராம் கஞ்சா போதைப்பொருளை மீட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்த வேளை , கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற இருவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 

மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் 

No comments