Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் !


இலங்கைச் சிறையில் உள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் சனிக்கிழமை முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் எதிர்வரும் 8 ஆம் திகதி ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்குள் மீனவர்கள் படகுடன் விடுதலை செய்யப்படாவிட்டால் ராமேஸ்வரம் மீனவர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தீர்மானித்துள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது .

இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 10,000 மீனவர்கள் நேரடியாகவும் 50,000 மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

No comments