Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, June 2

Pages

Breaking News

மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக பிரித்து விற்பனை செய்த கும்பல் கைது


மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக பிரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து 116 மோட்டார் சைக்கிளின் இலக்க தகடுகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அனுராதபுரம் ஸ்ரவஸ்திபுர, தம்புள்ளை கித்துல்ஹிதியாவ, மிரிஸ்கோனியா சந்தி மற்றும் ஹீன் மொரகொல்ல ஆகிய இடங்களில் வசிக்கும் 29 முதல் 44 வயதிற்கும் இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பிரதேச புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திருட்டு மோசடி சுமார் 10 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட இலக்கத் தகடுகளுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்களின் சட்டப்பூர்வ உரிமையாளர்களைக் கண்டறிவதற்காக இந்த விடயம் குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது.