Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். மாடொன்றை இறைச்சியாக்கிய குற்றம் - முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய நடவடிக்கை


சட்டவிரோதமான முறையில் மாட்டினை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

வடமராட்சி புலோலி பகுதியில் வீடொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சி யாக்க படுவதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டிற்கு பொலிஸார் விரைந்திருந்தனர். 

பொலிஸாரை கண்டதும் மாட்டை இறைச்சியாக்கி கொண்டிருந்த நபர் வீட்டில் இருந்து தப்பி ஓடியிருந்தார். அதனை அடுத்து இறைச்சிகளை மீட்ட பொலிஸார் , வீட்டின் உரிமையாளரான , தப்பியோடியவரின் தாயாரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவரை செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

இதேவேளை தப்பியோடிய நபர் , முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும் , பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றிய கால பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

No comments