Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாணயத் தாள்களை சேதப்படுத்தினால் சிறை!


இலங்கையின் நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் அவ்வாறு நாணயத் தாள்களை சேதப்படுத்துவோருக்கு  மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகையான பணமும்  அபராதமாக விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நாணய தாள்களில் பூங்கொத்து உருவாக்கி பரிசளிப்பது , நாணய தாள்களில் மாலைகள் செய்து அணிவிப்பது , பெயர்கள் எழுதுவது , போன்ற வேண்டும் என்றே நாணய தாள்களில் சேதங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

No comments