Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட குற்றத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர், இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புங்குடுதீவு பகுதியில் இருந்து சடடவிரோதமான முறையில் ,மாடுகளை கொடுமைப்படுத்தும் முகமாக வாகனம் ஒன்றில் 08 மாடுகளை கடத்தி வந்த நிலையிலையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பண்ணை சுற்றுவட்ட பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் பொலிஸ் அதிரடி படையினர் ஈடுபட்டிருந்த வேளை , சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனத்தினை வழிமறித்து சோதனையிட்ட போது , வாகனத்தினுள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் , மாடுகள் காணப்பட்டுள்ளன. 

அதனை தொடர்ந்து வாகனத்தில் இருந்த மூவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அதில் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் என தெரிய வந்துள்ளது. 

மேலும் விசாரணைகளின் போது , குறித்த மூவரும் புங்குடுதீவு பகுதிக்கு வாகனத்தில் சென்று மாடுகளை களவாடி அவற்றின் கால்களை கட்டி , கொடுமைப்படுத்தும் முகமாக வாகனத்தில் ஏற்றி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. 

அதனை அடுத்து மூவரையும் கைது செய்த அதிரடி படையினர் , மாடுகள் மற்றும் வாகனத்தினையும் மீட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

No comments