Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் கைது!


வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில்  6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் , குற்றம் சாட்டப்பட்டு வந்தது. 

இந்நிலையில், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய செயல்பட்ட தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக சோதனையில் ஈடுபட்டதுடன் மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ,கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றால் தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

No comments