Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மரதனில் பங்குபற்றிய மாணவன் உயிரிழப்பு


புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட சிறுவன் திடீரென சுகயீனமுற்று கால்வாயில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கிரிஉல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வெத்தெவ அமரகொட பிரதேசத்தைச் சேர்ந்த ரவிந்து டில்ஷான் என்ற 17 வயது இளைஞராவார்.

இவர் எதிர்வரும் மே மாதம்  நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் பங்குபற்றவிருந்தார்.

இந்நிலையில் வெத்தெவ பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட இவர் போட்டி முடிவடைவதற்கு 500 மீட்டர் தூரம் இருக்கும்போது திடீரென சுகயீனமுற்றுள்ள நிலையில் அருகிலிருந்த கால்வாயில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.  

குறித்த போட்டி இடம்பெற்ற பகுதியில் கடும் வெப்பநிலை காணப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments